சோதனைச்சாவடி அருகே மணல் கடத்திய லாரி பறிமுதல்

ஓசூர், டிச.30:ஓசூர் அடுத்த ஜூஜூவாடி கிராம நிர்வாக அலுவலர் தண்டபாணி மற்றும் அலுவலர்கள், நேற்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஓசூர்-பெங்களூரு சாலையில், ஜூஜூவாடி சோதனைச்சாவடி அருகில் நின்று கொண்டிருந்த லாரியை சோதனை செய்த போது, அதில் 3 யூனிட் மணல் இருந்தது தெரியவந்தது. விசாரணையில், ஓசூரில் இருந்து பெங்களூருவுக்கு மணல் கடத்த முயன்றது தெரியவந்தது. இதையடுத்து, கிராம நிர்வாக அலுவலர் தண்டபாணி கொடுத்த புகாரின் பேரில், சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து, லாரியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: