பழநி, டிச.30: வையாபுரிக் கண்மாயில் உள்ள அமலை செடிகளை அகற்ற வேண்டுமென தமிழக மக்கள் முன்னணி சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பழநி அருகே சின்னக்கலையம்புத்தூரில் தமிழக மக்கள் முன்னணியின் ஆய்வுக்கூட்டம் நடந்தது. மாவட்ட மகளிரணித்தலைவி சந்திரகலா தலைமை வகித்தார். மாவட்டத்தலைவர் சையதுராஜா முன்னிலை வகித்தார். ஒன்றிய செயலாளர் ஆறுமுகம் வரவேற்றுப் பேசினார். மாநிலத்தலைவர் ஜாபர்சாதிக் சிறப்புரையாற்றினார்.