திட்டக்குடி, டிச. 30: கடலூர் மாவட்டம் மங்களூர் ஊராட்சி ஒன்றியத்தில் அனைத்து ஊராட்சிகளின் தலைவர், வார்டு உறுப்பினர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், மாவட்ட கவுன்சிலர்கள் ஆகியோரை தேர்ந்து எடுக்கும் வகையில் தேர்தல் நடந்தது. முதல்கட்ட வாக்குப்பதிவு முடிந்த நிலையில் அனைத்து வாக்கு பெட்டிகளும் திட்டக்குடி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இந்த பள்ளிக்கு போலீசார் துப்பாக்கி ஏந்திய நிலையில் உரிய பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.