அரசு பள்ளியில் சார் ஆட்சியர் ஆய்வு

திட்டக்குடி, டிச. 30: கடலூர் மாவட்டம் மங்களூர் ஊராட்சி ஒன்றியத்தில் அனைத்து ஊராட்சிகளின் தலைவர், வார்டு உறுப்பினர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், மாவட்ட கவுன்சிலர்கள் ஆகியோரை தேர்ந்து எடுக்கும் வகையில் தேர்தல் நடந்தது. முதல்கட்ட வாக்குப்பதிவு முடிந்த நிலையில் அனைத்து வாக்கு பெட்டிகளும் திட்டக்குடி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இந்த பள்ளிக்கு போலீசார் துப்பாக்கி ஏந்திய நிலையில் உரிய பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், விருத்தாசலம் சார் ஆட்சியர் பிரவீன்குமார் இப்பள்ளியில் நேரடியாக ஆய்வு மேற் கொண்டார். வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறைகள் சீலிடப்பட்டு பாது பாதுகாப்பான நிலையில் உள்ளதா, சிசிடிவி கேமராக்கள் முறையாக உள்ளனவா என்பது குறித்து ஆய்வு செய்தார். அ்ப்போதுதிட்டக்குடி தாசில்தார் செந்தில்வேலன், திட்டக்குடி கிராம நிர்வாக அலுவலர் ரஞ்சித்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories: