மதுரா கோட்ஸ் அண்ணா தொழிற்சங்க மகா சபை கூட்டம்

வி.கே.புரம்,டிச.30: வி.கே.புரம் மதுரா கோட்ஸ் அண்ணா தொழிற்சங்க மகா சபை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் அண்ணா தொழிற்சங்க  தலைவர் கைக்கொண்டார் வரவேற்றார்.தொழிற்சங்க செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான சக்திவேல்முருகன் வரவு-செலவு வாசித்தார். இதில் 2019 வருட வரவு-செலவு வாசிக்கப்பட்டது. புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்க பட்டனர். தலைவராக கைக்கொண்டாரும், செயலாளராக சக்திவேல்முருகன் உட்பட 14 நிர்வாகிகள் மகா சபை மூலம் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கபட்டனர்.

வாரிசுக்கு ஆள் எடுத்தல், அதற்கு அனைத்து தொழிற்சங்க முடிவுகள், மில் நிர்வாகம் கொடுத்துள்ள புரோபசல் பற்றி விரிவாக விவாதிக்கபட்டது. மற்றும் டிபார்ட்மென்ட் குறைகள் பற்றியும் உறுப்பினர்கரிடம் கருத்து கேட்கப்பட்டது. இந்த மகா சபைக்கு சிறப்பு அழைப்பாளராக மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை இணை செயலாளர் வெங்கட்ராமன் கலந்து கொண்டார். கவுரவ தலைவர் இசக்கிமுத்து நன்றி கூறினார்.

Related Stories: