வி.கே.புரம்,டிச.30: வி.கே.புரம் மதுரா கோட்ஸ் அண்ணா தொழிற்சங்க மகா சபை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் அண்ணா தொழிற்சங்க தலைவர் கைக்கொண்டார் வரவேற்றார்.தொழிற்சங்க செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான சக்திவேல்முருகன் வரவு-செலவு வாசித்தார். இதில் 2019 வருட வரவு-செலவு வாசிக்கப்பட்டது. புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்க பட்டனர். தலைவராக கைக்கொண்டாரும், செயலாளராக சக்திவேல்முருகன் உட்பட 14 நிர்வாகிகள் மகா சபை மூலம் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கபட்டனர்.