ராசிபாளையம் ஊராட்சியில் யமுனா சுகுமார் வாக்கு சேகரிப்பு

சூலூர்,டிச.29: ராசிபாளையம் ஊராட்சி தலைவர் பதவிக்கு மதசார்பற்ற கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் போட்டியிடும் யமுனா சுகுமார் நேற்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். யமுனா சுகுமாருக்கு மூக்குகண்ணாடி சின்னத்திற்கும்,

மாவட்ட கவுன்சிலர் வேட்பாளர் செல்வபூபதி முத்துலிங்கம், ஒன்றிய கவுன்சிலர் வேட்பாளர் தமிழரசி செந்தில்குமார் ஆகியோருக்கு உதயசூரியன் சின்னத்திற்கும் வாக்குகள் கேட்டு பிரசார பேரணி நடத்தினர். இதில் ஒன்றிய பொறுப்பாளர் தளபதி முருகேசன், சூலூர் மன்னவன், ராசிபாளையம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தி.மு.க.வின் மூத்த பொறுப்பாளர் மணியன், ஆகியோருடன்  ஊராட்சி முழுவதும்  சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

Related Stories: