மதுபாட்டில்கள் விற்ற 2 பேர் கைது

விருத்தாசலம், டிச. 29: பெண்ணாடம் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் மாளிகைகோட்டம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள சுடுகாடு அருகே அதே பகுதியை சேர்ந்த காசிநாதன் மகன் பழனிவேல்(40) என்பவர் சாராயம் மற்றும் மதுபாட்டில்கள் வைத்துக்கொண்டு விற்பனை செய்து கொண்டிருந்தார். இதேபோல் பொன்னேரி பேருந்து நிறுத்தம் அருகே அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் தாலுகா இடையக்குறிச்சியை சேர்ந்த கணேசன் மகன் சக்கரவர்த்தி(32) என்பவர் அரசு அனுமதி இல்லாமல் மதுபாட்டில் விற்பனை செய்து கொண்டிருந்தார். இதையடுத்து பெண்ணாடம் போலீசார் இருவர் மீதும் வழக்குப்பதிந்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 10 லிட்டர் சாராயம் மற்றும் 24 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Related Stories: