சேலம் ஏவிஆர் ஸ்வர்ண மஹால் ராசிபுரம் கிளை திறப்பு விழா

சேலம், டிச.29: சேலம் ஏவிஆர் ஸ்வர்ண மஹாலின் ராசிபுரம் கிளை திறப்பு விழா நாளை(30ம் தேதி) நடக்கிறது. சேலம் ஏவிஆர் ஸ்வர்ண மஹால் ஜூவல்லர்ஸ் நகை கடையின் 16வது கிளை ராசிபுரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நாளை(30ம் தேதி) காலை 9.30 மணிக்கு நடக்கிறது.

இதுகுறித்து நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சஞ்சய் கூறுகையில், ஏவிஆர் ஸ்வர்ண மஹால் ஜூவல்லர்ஸ் சேலம் கடைவீதி, ஸ்வர்ணபுரி, தாரமங்கலம், மேட்டூர், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர், ஆத்தூர், திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, பாண்டிச்சேரி, பெங்களூரு- ஜெயநகர், டிக்கன்சன் ரோடு என 15 கிளைகளை கொண்டு இயங்கி வருகிறது. ராசிபுரம் மக்களுக்கு மிக சிறந்த சேவையை வழங்கிடும் வகையில் எங்களது 16வது கிளையை திறக்க உள்ளோம். திறப்பு விழா சலுகையாக 30,31 மற்றும் ஜனவரி 1ம் தேதி என 3 நாட்கள் ஒவ்வொரு 3 மணி நேரத்திற்கு ஒருமுறை ஸ்லோகன் போட்டி நடத்தி வெற்றிபெறுவோருக்கு ஒரு சவரன் தங்க நாணயம் பரிசாக வழங்க உள்ளோம் என்றார்.

Related Stories: