சேலம், டிச.27: சேலத்தில், முதன்முறையாக ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் உணவுத் திருவிழா 3 நாட்கள் நடைபெறுகிறது. இதுகுறித்து ஹோட்டல் உரிமையாளர்கள் சங்க தலைவர் சண்முகம், செயலாளர் பழனிசாமி, துணைத் தலைவர்கள் நௌசாத், பாபு ஆகியோர் கூறியதாவது: சேலம் மாவட்டத்தில், முதன்முறையாக ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் உணவுத் திருவிழா 27ம் தேதி முதல் 29ம் தேதி வரை ஜவஹர் மில் திடலில் நடக்கிறது. இதில், சேலத்தில் உள்ள முக்கிய ஹோட்டல்கள் பங்கேற்கின்றன. மொத்தம் 102 ஸ்டால்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் செட்டிநாடு, சைனீஸ், தந்தூரி, சைவம், அசைவம் என பாரம்பரிய உணவு வகைகள் நேரடியாக மக்களுக்கு சமைத்து வழங்குகிறோம். விலையும் மிக குறைவாக வைத்துள்ளோம்.