சின்னசேலம், டிச. 27: கள்ளக்குறிச்சியில் கச்சிராயபாளையம் சாலையில் உள்ள கே.பி.ஆர் நகரை சேர்ந்தவர் சுப்பிரமணியன்(55). மனைவி, மகன், மகளுடன் வசித்து வந்தார். இவர் கள்ளக்குறிச்சியை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் சுற்றுச்சூழல் மனித உரிமை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தில் நிர்வாகியாக இருந்து வந்தார். மேலும் இவர் பைனான்ஸ் தொழிலும் செய்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில், சுப்பிரமணியன் நேற்றுமுன்தினம் இரவு சென்னை செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சின்னசேலம் ரயில் நிலையம் சென்றுள்ளார். பின்னர் நேற்று காலை சுப்பிரமணியன் குடும்பத்தினர் சென்னை சென்று விட்டாரா என்று தெரிந்து கொள்வதற்கு போன் செய்துள்ளனர். போனை எடுக்கவில்லை. இதனால் குடும்பத்தினர் பதற்றத்துடன் இருந்துள்ளனர்.