டீக்கடைகளில் திடீர் ஆய்வு

உளுந்தூர்பேட்டை, டிச. 27:  உளுந்தூர்பேட்டையில் உணவு பாதுகாப்பு அலுவலர் கதிரவன் தலைமையிலான சுகாதார குழுவினர் பேருந்து நிலையம், பாண்டூர் ரோடு, விருத்தாசலம் ரோடு, கடைவீதி உள்ளிட்ட முக்கிய இடங்களில் உள்ள டீக்கடைகளில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இதில் 5க்கும் மேற்பட்ட டீக்கடைகளில் கலப்பட டீத்தூள் கொண்டு டீ போட்டு பொதுமக்களுக்கு வினியோகம் செய்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அந்த கலப்பட டீத்தூள் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்ததுடன், தொடர்ந்து இது போன்று கலப்பட டீத்தூளை பயன்படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.

Related Stories: