மெகா சூதாட்டம் 8 பேர் கைது ரூ.1.40 லட்சம் பறிமுதல்

கோவை, டிச.22:  கோவையில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 8 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. கோவை பெரியகடை வீதியில் ஒரு கும்பல், பணம் வைத்து சீட்டாட்டத்தில் ஈடுபடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு சோதனை நடத்தியபோது தியாகி குமரன் மார்க்கெட் இருசக்கர வாகனம் நிறுத்தும் இடம் அருகே மறைவான இடத்தில் பணம் வைத்து சீட்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த அதே பகுதியை சேர்ந்த முகமதுஷபி, அப்பாஸ்அலி, சந்தோஷ் உள்ளிட்ட 8 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து சீட்டாட்டத்திற்கு பயன்படுத்திய ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories: