காரிமங்கலம், டிச.19: காரிமங்கலம் நகருக்குள் அதிவேகத்தில் செல்லும் பஸ்களால், பொதுமக்கள் பீதியுடன் அலறியடித்து ஓட்டம் பிடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. காரிமங்கலம் வழியாக 100க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பஸ்கள் தினந்தோறும் சென்று வருகின்றது. தர்மபுரியில் இருந்து கிருஷ்ணகிரி செல்லும் தனியார் பஸ்கள், காரிமங்கலம் நகருக்குள் செல்வது வழக்கம். இந்நிலையில், கெரகோடஅள்ளி பிரிவு சாலையில் இருந்து, ராமசாமி கோயில் காரிமங்கலம் பஸ் ஸ்டாண்டை அடையும்வரை, அதிவேகமாக செல்வதுடன், ஏர் ஹாரன்கள் ஒலித்தபடியே இயக்கப்படுகிறது. இவ்வழியில் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ மாணவிகள், பெண்கள் கலைக்கல்லூரி, வட்டார கல்வி மையம், தாலுகா அலுவலகம், கால்நடை மருத்துவமனை, காவல் நிலையம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் உள்ளன. மேலும் ஏராளமான குடியிருப்புகளும் உள்ளன.