திறப்புரிஷிவந்தியம், டிச. 19: ரிஷிவந்தியம் தொகுதிக்கு உட்பட்ட பகண்டை கூட்டுச்சாலையில் உள்ள ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் எதிரே 2019-20ம் ஆண்டின் சட்டமன்ற மேம்பாட்டு நிதியில் புதியதாக கட்டப்பட்டுள்ள கூட்ட அரங்கம் திறப்பு விழா நடைபெற்றது.ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன் கலந்துகொண்டு கூட்ட அரங்கத்தை திறந்து வைத்து நலத்திட்டங்களை வழங்கினார். நிகழ்ச்சியில் ரிஷிவந்தியம் ஒன்றிய செயலாளர்கள் வடக்கு பாண்டுரங்கன், தெற்கு பெருமாள், சங்கராபுரம் ஒன்றிய செயலாளர் முனியன், திருக்கோவிலூர் ஒன்றிய செயலாளர்கள் தங்கம், ஏகாம்பரம், மாவட்ட துணை செயலாளர் அமிர்தவள்ளி கோவிந்தராஜ், திருக்கோவிலூர் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் உதயா, துணை அமைப்பாளர் பிரகாஷ், ஒன்றிய துணை செயலாளர் சண்முகம், அவிரியூர் ஹரி, அய்யனார், வாணாபுரம் ஊராட்சி செயலாளர் சண்முகம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். முன்னதாக சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன் தலைமையில் ரிஷிவந்தியம் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து சட்டமன்ற அலுவலகத்தில் உள்ள அரங்கில் முன்னாள் முதல்வர் கருணாநிதி படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.