கடையம், டிச. 18: பொட்டல்புதூர் புதுத்தெருவில், தினகரன் செய்தி எதிரொலியாக மின் இணைப்பு அளிக்கப்பட்டு சின்டெக்ஸ் தொட்டி பயன்பாட்டுக்கு வந்தது. கடையம் யூனியன் பொட்டல்புதூர் ஊராட்சிக்குட்பட்டது புதுத்தெரு கிராமம். இங்குள்ள வடக்குதெரு, தெற்குதெரு, நடுத்தெருவில் 100க்கும் மேற்பட்ட வீடுகளில் 700க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு ஊராட்சி சார்பில் 10 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதனால் போதிய குடிநீர் கிடைக்காமல் இந்த பகுதி மக்கள் அவதிக்குள்ளாகி வந்தனர். இதையடுத்து இங்குள்ள சமுதாய நலக்கூடம் அருகே தாய் திட்டத்தின் கீழ் 2011-12ல் சிறு முன்விசையுடன் கூடிய சின்டெக்ஸ் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது. இதனை அப்பகுதி மக்கள் பயன்படுத்தி வந்த நிலையில், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சின்டெக்ஸ் குடிநீர் தொட்டிக்கு மின் இணைப்பு வரும் மின்கம்பத்தின் மீது வாகனம் மோதி கம்பம் சேதமடைந்து வயர் அறுந்து விழுந்தது.