பெரம்பலூர், டிச. 17: பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் பின்புறம் அமைந்துள்ள பிரம்மரிஷிமலை பகவான் ல காகமுனி தலையாட்டி சித்தர் பெருமானுடைய 31ம் ஆண்டு குருபூஜை விழா நடந்தது.
மாதம் மும்மாரி மழை பொழியவும், விவசாயம் செழிக்கவும், மனிதர்களிடம் தர்ம சிந்தனையும், ஜீவகாருண்ய சிந்தனை ஓங்கவும் சித்தர்கள் அருளாசி மலரவும், இயற்கை சீற்றங்களில் இருந்து மக்களை பாதுகாக்க வேண்டியும், கோமாதா பூஜையை தொடர்ந்து, 210 சித்தர்கள் யாகம் நடந்தது. பின்னர் சிவலிங்கத்துக்கு அபிஷேக, ஆராதனை நடந்தது.