மொடக்குறிச்சி, டிச. 17: மொடக்குறிச்சி ஒன்றியத்தில் வேட்பு மனு தாக்கலை வேடிக்கை பார்க்க வந்தவர் வேட்பாளராக அதிரடியாக மனு தாக்கல் செய்து அசத்தினார். மொடக்குறிச்சி ஒன்றியத்திற்குட்பட்ட பழமங்கலம் ஊராட்சியை சேர்ந்தவர் தேவராஜ் (35). இவர் பழமங்கலம் ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் கணக்கம்பாளையம் பகுதியை சேர்ந்த தங்கவேல் என்பவர் மனு தாக்கல் செய்ய போவதாக தேவராஜ் மற்றும் அவரது ஆதரவாளர்களை அழைத்திருந்தார். தேவராஜூம் மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு வந்திருந்தார். அப்போது அங்கு வந்திருந்தவர்கள் மனு தாக்கல் செய்வதில் பரபரப்பாக ஈடுபட்டிருந்தனர். அப்போது அவருடன் வந்திருந்த அவரது நண்பர்கள் சிலர் பழமங்கலம் ஊராட்சியில் நீங்கள் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்டு இருந்தால் எளிதில் வெற்றி பெறலாம் என கூறி அவரை உசுப்பேற்றினர்.