வள்ளியூர், டிச.16: வள்ளியூர் தங்க நாற்கர சாலையின் அருகில் உள்ள பிலாக்கொட்டைபாறை விலக்கில் மிக பிரம்மாண்டமாக நிலா பேக்கரி, ஹோட்டல் திறப்பு விழா நடந்தது. வள்ளியூர் ஜோஸ் கார்மெண்ட்ஸ் உரிமையாளரும், வணிகர் சங்க தலைவருமான எட்வின் ஜோஸ், ராஜ் கன்ஸ்ட்ரெக்ஷன் உரிமையாளர் ராஜ், தொழிலதிபர் சுரேஸ் ஆகியோர் இணைந்து திருநெல்வேலியிலிருந்து-கன்னியாகுமரி தங்க நாற்கர சாலையில் வள்ளியூர் அருகேயுள்ள பிலாக்கொட்டைபாறை விலக்கில் நேற்று புதியதாக நிலா பேக்கரிஹோட்டால் திறக்கப்பட்டது. வள்ளியூர் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் லாரன்ஸ் தலைமை வகித்து திறந்து வைத்தார்.பியூலா எட்வின், பால்கனி முத்துராஜ், ஹெலின் சுரேஷ் திருவிளக்கு ஏற்றினார். வள்ளியூர் பஞ்குதந்தை லாரன்ஸ் அர்ச்சித்தார். தெட்ஷன மாற நாடார் சங்க ஆட்சிக்குழு தலைவர் கணேசன் பேக்கரி உற்பத்தி பிரிவை திறந்து வைத்தார். இக்கடையின் முக்கிய அம்சங்கள் என்னவென்றால் சுகாதாராமான திறந்தவெளியில் இயற்கையை ரசித்துக்கொண்டு சாப்பிடும் வசதி உள்ளது. குழந்தைகள் விளையாடி மகிழ்வதற்கு ஊஞ்சல், சருக்கு, பொம்மை ஊஞ்சல், டைனோசர் சருக்கு மற்றும் வெளியூரிலிருந்து வரும் பயணிகளுக்கு நவீன கழிப்பிட வசதியும் செய்யப்பட்டுள்ளது. திறப்பு விழாவை முன்னிட்டு சிறுவர்களுக்கு குதிரை சவாரி 3 நாட்கள் இலவசமாக நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.