மெக்கானிக் மனைவி மாயம்

கிருஷ்ணகிரி, டிச.13:  ராயக்கோட்டை அருகே பாளையூர் பகுதியைச் சேர்ந்தவர் சின்னக்காவேரி மகன் கோபால் (34). இவர் மெக்கானிக் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு லட்சுமி (29) என்பவருடன் திருமணமாகி 11 ஆண்டுகள் ஆகின்றன. இதில் இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகளும், ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் லட்சுமி 11ம் தேதி காலை தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு சென்று வருவதாக கூறி சென்றுள்ளார். ஆனால் இரவாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த கோபால் பல இடங்களில், உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்காததால், ராயக்கோட்டை போலீசில் புகார் செய்தார். இதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து மாயமான லட்சுமியை தேடி வருகின்றனர்.

Related Stories: