பான்பராக் விற்ற 3 பேர் கைது

கிருஷ்ணகிரி, டிச.13: பர்கூர் போலீஸ் நிலைய எஸ்ஐ பச்சமுத்து தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் அப்பகுதிகளில் உள்ள கடைகளில் சோதனை நடத்தினர். அப்போது பர்கூர், ஜெகதேவி ரோடு பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார்(35), நேரு நகர் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேஷன்(47) ஆகியோர் பெட்டிக்கடையில் அரசு தடை செய்த பான்பராக், குட்கா போன்ற புகையிலைப் பொருட்களை திருட்டுத்தனமாக விற்பனை செய்ததை கண்டு பிடிது அந்த பொருட்களை பறிமுதல் செய்ததுடன் அவர்களை கைது செய்தனர்.  அதனைப்போல், கந்திகுப்பம் போலீஸ் எஸ்ஐ சிரஞ்சீவிகுமார் தலைமையிலான போலீசார் நடத்திய சோதனையில், அட்சமங்கலம் சந்திப்பு ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ஜோசப் (33) என்பவர் தனது கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்ததை கண்டு பிடித்த போலீசார் அவரையும் கைது செய்தனர்.

Related Stories: