பள்ளி மாணவர்களுக்கு நோட்டு பேனா வழங்கல்

சீர்காழி, டிச.13: நாகை மாவட்டம் சீர்காழி தென்பாதி பெருந்தலைவர் காமராஜர் ஆட்டோ ஓட்டுனர் மற்றும் உரிமையாளர்கள் நலச்சங்க சார்பில் தென்பாதி விதி பி நடுநிலைப்பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு நோட்டு பேனா வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆட்டோ சங்க சங்கத் தலைவர் தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தார். செயலாளர் நேதாஜி, பொருளாளர் குறிஞ்சி மணி, துணைத்தலைவர் அன்பு முன்னிலை வகித்தனர். ஆசிரியர் ஹேமலதா வரவேற்றார்.

விழாவில் மாணவ, மாணவிகளுக்கு நோட்டு பேனாா இனிப்புகள் வழங்கப்பட்டன. இதில் ஆசிரியர்கள் ராமகிருஷ்ணன், உமாபதி, சிவகுமார், மீனாட்சி, ஆட்டோ சங்க உறுப்பினர்கள் முத்துக்குமரன், செந்தில், செல்வராஜ், கண்ணன், பாலு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: