உளுந்தூர்பேட்டை, டிச. 13: உளுந்தூர்பேட்டை அருகே எலவனாசூர்கோட்டை காவல்நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் புதுச்சேரியில் இருந்து மதுபாட்டில்களை கடத்தி வந்து விற்பனை செய்யப்பட்டு வருவதாக வந்த தகவலை தொடர்ந்து விழுப்புரம் மாவட்ட மத்திய புலனாய்வு பிரிவை சேர்ந்த இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ், சப் இன்ஸ்பெக்டர் அழகிரி உள்ளிட்ட குழுவினர் நேற்று முன்தினம் இரவு தொட்டி குஞ்சரம் கிராமத்தில் உள்ள கரும்பு தோட்டத்தில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கரும்பு தோட்டத்தில் பதுக்கி வைத்து இருந்த ரூ 1 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பீட்டில் 28 பெட்டிகளில் இருந்த மதுபாட்டில்கள் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.