பந்தலூர், டிச.12: கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம், பந்தலூர் கிளை நூலகம், மகாத்மா காந்தி பொது சேவை மையம் ஆகிவை சார்பில் கல்வி விழிப்புணர்வு மற்றும் நூலக அட்டை வழங்கும் நிகழ்ச்சி பந்தலூர் புனித சேவியார் ஆரம்பப்பள்ளியில் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர் செலின் தலைமை தாங்கினார். கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் காளிமுத்து, நூலகர் அறிவழகன், மகாத்மா காந்தி பொது சேவை மைய தலைவர் நௌஷாத், கோவை கிராமிய சங்கேந்திரா அமைப்பு செயலாளர் வின்சென்ட் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்ரமணியம் பேசுகையில், நூலகம் பல்வேறு நூல்களைப் படிப்பதற்கு உதவியாக அமைந்துள்ளது. நூல்களைப் படிக்கும்போது மாணவர்களுக்கு நல்லெண்ணங்கள் அதிகரிப்பதனால் குற்றங்கள் குறைந்து காணப்படும். மாணவர்கள் படிப்பில் ஆர்வம் செலுத்தவேண்டும். பொது அறிவு வளர்த்துக்கொள்ள செய்தித்தாள் வாசிப்பதை கடைபிடிக்க வேண்டும்.