திண்டுக்கல் பேகம்பூரில் குடியுரிமை மசோதா நகலை எரித்த 45 பேர் கைது

திண்டுக்கல், டிச. 11: திண்டுக்கல் பேகம்பூரில் குடியுரிமை திருத்த மசோதா நகலை எரித்த எஸ்டிபிஐ கட்சியினர் 45 பேரை போலீசார் கைது செய்தனர்.

மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த குடியுரிமை திருத்த மசோதாவை திரும்ப பெற கோரி நாடு முழுவதும் எஸ்டிபிஐ கட்சியினர் போராட்டங்கள் மற்றும் அதன் நகலை எரிக்கும் சம்பவங்களில் ஈடுபடுவதாக அறிவித்திருந்தனர்.

இதையொட்டி திண்டுக்கல் பேகம்பூரில் நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மாலையில் எஸ்டிபிஐ கட்சி மாவட்ட தலைவர் அப்துல் லத்தீப் தலைமையில் குடியுரிமை மசோதாவை எதிர்த்து போராட்டம் நடத்தினர். தொடர்ந்து நகலை எரிக்க முயன்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். எனினும் அதையும் மீறி நகலை எரித்தனர். இதனால் போலீசாருக்கும், எஸ்டிபிஐ கட்சியினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் போலீசார் நகலை எரித்ததாக 45 பேரை கைது செய்தனர்.

Related Stories: