கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 4 தாலுகாவில் 14ம் தேதி குறைகேட்பு கூட்டம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட 4 தாலுகா பகுதியில் பொது விநியோகத்திட்ட குறைகேட்பு கூட்டம் வரும் 14ம் தேதி நடைபெறும் என மாவட்ட தனி துணை ஆட்சியர் தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட 4 தாலுகா பகுதியில் வருகின்ற 14ம்தேதி காலை 10 மணி முதல் மாலை 4 மணிவரை பொதுவிநியோகத்திட்ட குறைகேட்பு கூட்டம் நடைபெறுகிறது. உளுந்தூர்பேட்டை தாலுகா மூலசமுத்திரம் கிராமத்திலும், கள்ளக்குறிச்சி தாலுகா சித்தலூர் கிராமத்திலும், சங்கராபுரம் தாலுகா சேஷசமுத்திரம் கிராமத்திலும், சின்னசேலம் தாலுகா எடுத்தவாய்நத்தம் கிராமம் ஆகிய 4 தாலுகா பகுதியில் அந்தந்த வருவாய் வட்டாட்சியர் மற்றும் குடிமை பொருள் தனி வட்டாட்சியர்கள் தலைமையில் பொது விநியோகத்திட்ட குறைகேட்பு கூட்டம் நடைபெற உள்ளது.

இந்த குறைகேட்பு கூட்டத்தில் அந்த கிராமங்களுக்கு உட்பட்ட பொதுமக்கள் புதிய மின்னணு குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்தல், இணையதளம் மூலம் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், பெயர் திருத்தம், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், வயது திருத்தம், மற்றும் பொது விநியோகத்திட்டம் தொடர்பான மனுக்களை மேற்கண்ட முகாம்களில் மனுவாக கொடுத்து பயனடையலாம் என மாவட்ட தனி துணை ஆட்சியர் (சமூக நலபாதுகாப்பு திட்டம்) சரவணன் தெரிவித்துள்ளார்.

Related Stories: