கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட 4 தாலுகா பகுதியில் பொது விநியோகத்திட்ட குறைகேட்பு கூட்டம் வரும் 14ம் தேதி நடைபெறும் என மாவட்ட தனி துணை ஆட்சியர் தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட 4 தாலுகா பகுதியில் வருகின்ற 14ம்தேதி காலை 10 மணி முதல் மாலை 4 மணிவரை பொதுவிநியோகத்திட்ட குறைகேட்பு கூட்டம் நடைபெறுகிறது. உளுந்தூர்பேட்டை தாலுகா மூலசமுத்திரம் கிராமத்திலும், கள்ளக்குறிச்சி தாலுகா சித்தலூர் கிராமத்திலும், சங்கராபுரம் தாலுகா சேஷசமுத்திரம் கிராமத்திலும், சின்னசேலம் தாலுகா எடுத்தவாய்நத்தம் கிராமம் ஆகிய 4 தாலுகா பகுதியில் அந்தந்த வருவாய் வட்டாட்சியர் மற்றும் குடிமை பொருள் தனி வட்டாட்சியர்கள் தலைமையில் பொது விநியோகத்திட்ட குறைகேட்பு கூட்டம் நடைபெற உள்ளது.