கொடைக்கானல், டிச. 1: கொடைக்கானல் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்பவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. தாசில்தார் வில்சன் தலைமை வகிக்க, வருவாய் ஆய்வாளர் நவநீத கிருஷ்ணன் மற்றும் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். வெளிநாடுகளுக்கு வேலை செல்பவர்கள் எப்படி தங்களை பதிவு செய்து கொண்டு செல்ல வேண்டும், தாங்கள் வேலை செய்யும் நிறுவனத்தில் தகவல்களை பெறுவது எப்படி, வெளிநாட்டில் உள்ள இந்திய தூதரகத்தை எப்படி தொடர்பு கொள்வது குறித்து தெரிவிக்கப்பட்டது. இதில் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.