சாத்தூர், நவ.29: சாத்தூரில் உள்ள பேக்கரி தொழிலாளி வீட்டில் ஐந்து பவுன் நகை திருட்டு போனது. சாத்தூர் ஆண்டாள்புரத்தை சேர்ந்தவர் மகாராஜா(30). பேக்கரி தொழிலாளியான இவர் வாடகை வீட்டில் குடும்பத்துடன் வசிக்கிறார். இவரது மனைவி மணிமாலா பிரசவத்திற்காக திருத்தங்கல்லில் உள்ள தாய் வீட்டிற்கு சென்றவிட்டார். மகாராஜாவும் குழந்தை, மனைவியை பார்க்க சென்றுவிட்டார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு மகாராஜா மீண்டும் வீட்டுக்கு வந்து பார்த்தபோது, கதவு திறந்த நிலையில் இருந்துள்ளது. பதறிப்போன மகாராஜா உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவும் திறந்த நிலையில் இருந்துள்ளது.