நண்பரின் காதை கடித்து துப்பிய வாலிபர் கைது

கள்ளக்குறிச்சி, நவ. 29:    கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியை சேர்ந்தவர் அலெக்சாண்டர்(43). இவரது நண்பர்கள் ஏமப்பேர் காலனி பகுதியை சேர்ந்த மாயகண்ணன்(40), முருகன். சம்பவத்தன்று இவர்கள் 3பேரும் ஒன்றாக மது அருந்தியதாக கூறப்படுகிறது. அப்போது மாயகண்ணனை வீட்டில் விடுவதற்காக அலெக்சாண்டர் பைக்கில் அழைத்து சென்றுள்ளார்.

அப்போது வழியில் இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. மாயகண்ணன் வீட்டின் அருகே சென்றதும் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த மாயகண்ணன், அலெக்சாண்டரின் வலது காதை கடித்து துண்டாக துப்பியுள்ளார். இதனால் படுகாயமடைந்த அலெக்சாண்டர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அலெக்சாண்டர் கொடுத்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து மாயகண்ணனை கைது செய்தனர்.

Related Stories: