ஒட்டன்சத்திரம் அருகே மின்சாரம் தாக்கி இளம்பெண் பலி

ஒட்டன்சத்திரம், நவ. 27: ஒட்டன்சத்திரம் அருகே மோட்டாரை இயக்கிய போது மின்சாரம் தாக்கி பெண் பலியானார். ஒட்டன்சத்திரம் அருகே வெள்ளமடத்துப்பட்டியை சேர்ந்த ஞானசேகரன் மனைவி ஷாலினி (21). இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டியில் மின்மோட்டாரை இயக்க சென்றார். அப்போது மின்சாரம் தாக்கியதில் ஷாலினி சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து ஒட்டன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: