நாமகிரிப்பேட்டை, நவ.27: நாமகிரிப்பேட்டை டவுன் பஞ்சாயத்தில் சாக்கடை கால்வாய், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி, நேற்று மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். நாமகிரிப்பேட்டை பேருந்து நிலையத்தில், நேற்று தமிழ்நாடு மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் சார்பில், தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில தலைவர் இளங்கோ கலந்து கொண்டார். மாவட்ட செயலாளர் விஜயகுமார் தலைமை வகித்தார். மாவட்ட இணை செயலாளர் ஈஸ்வரன் வரவேற்றார். இந்த ஆர்ப்பாட்டத்தில், நாமகிரிப்பேட்டை டவுன் பஞ்சாயத்தில் சாக்கடை கால்வாய், சாலை மற்றும் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர்.