தேசிய நூலக வார விழா கரூர் நூலகத்தில் நூல்கள் கண்காட்சி

கரூர், நவ. 27: கரூர் கிழக்கு கிளை நூலகத்தில் தேசிய நூலக வாரவிழா நடைபெற்றது. நூலகர் சுமதி வரவேற்று பேசினார். புதிய நூல்கள் கண்காட்சி நடைபெற்றது. நூலக வாரவிழாவையொட்டி பேச்சு, ஓவியப்போட்டிகள் நடைபெற்றன. ஓவியப்போட்டியில் ஹரிகரன், பூபதி, திவ்யா, பேச்சுப்போட்டியில் ஹரிகரன், நிதர்ஷனா, ஹரிப்பிரியா வெற்றிபெற்றனர். கிருஷ்ணன் சிறப்புரையாற்றினார். ஆசிரியர் கனகராஜ், வாசகர் வட்ட தலைவர் கிருஷ்ணன் பேசினர். ஜெயந்தா, மாயவன், பாலசுப்பிரமணியன் ஆகியோர் பள்ளி மாணவர்களுக்கு உறுப்பினர் தொகை வழங்கினர். தனசேகரன் உள்ளிட்ட வாசகர்கள், புரவலர்கள், கலந்து கொண்டனர். பிரேமா நன்றி கூறினார்.

Related Stories: