சென்னை: பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர், சண்முகா நகர், நேதாஜி தெருவில் தனியார் சார்பில் புதிதாக கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டிடத்தில் முதல் மாடியில் நேற்று முன்தினம் எலக்ட்ரீசியன் பணிக்காக வந்த ரோகித் ஜெயபால் (27), செல்வம் மற்றும் ராபர்ட் உள்ளிட்ட தொழிலாளர்கள் இரவு பணி முடிந்ததும், மாடியில் அமர்ந்து மது அருந்தியுள்ளனர். போதை தலைக்கு ஏறியதும் தொழிலாளர்கள் மூவரும் அங்கேயே படுத்து தூங்கினர். இரவு 12 மணியளவில் ரோகித் ஜெயபால் தூக்கத்தில் உருண்டு மாடியில் இருந்து கீழே இருந்த தண்ணீர் தொட்டியில் விழுந்தார்.