நெல்லை, நவ. 27: பாவூர்சத்திரம் அருகே அடைக்கலபட்டணம் எஸ்எம்ஏ மெட்ரிக் பள்ளியில் இந்திய அரசியலமைப்பு தினம் கொண்டாடப்பட்டது. பள்ளி முதல்வர் மகேஸ்வரி ராஜசேகரன் தலைமை வகித்தார். துணை முதல்வர் சரளா ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார். இந்திய அரசியலமைப்பு சாசனத்தின் முக்கியத்துவம் பற்றி மாணவர்கள் பேசினர். 9ம் வகுப்பு மாணவிகள் ஆயிஷா ஷமிரா, மிர்ஷா வர்ஷினி, சாருமதி அரசியலமைப்பு சாசனத்தில் மூன்று முக்கிய உறுப்புகள் பற்றி பேசினர். 8ம் வகுப்பு மாணவிகள் கணேசலேகா, செல்வகவிதா அரசை நெறிப்படுத்தும் கொள்கைகள் பற்றியும், 7ம் வகுப்பு மாணவர்கள் ஜேப்ரின் ஷாம்ராஜ், ஜெயஷினி வாக்குரிமை பற்றியும் பேசினர். 6ம் வகுப்பு மாணவர்கள் மித்ரா, ரேணுகா அடிப்படை உரிமைகள் பற்றி பேசினர்.