கீழ்வேளூர் அருகே தேவபுரீஸ்வரர் கோயிலில் சங்காபிஷேகம்

கீழ்வேளூர், நவ.27: நாகை மாவட்டம் கீழ்வேளூரை அடுத்த மதுரபாஷினி அம்மாள் சமேத தேவபுரீஸ்வரர் சுவாமி கேயிலில் கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு 108 சங்காபிஷேகம் நடைபெற்றது.சங்காபிஷேகத்தை முன்னிட்டு 108 சங்குகளில் புனித நீர் வைத்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து சிறப்பு சங்காபிஷேகம் நடைபெற்றது. பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது.

Related Stories: