சாலை விதி மீறுபவர்களை கண்டறிய மதுரை நகர் பகுதியில் போலீசாருக்கு 40 கேமரா

மதுரை, நவ. 26:  மதுரை நகரில் போக்குவரத்து போலீஸ் அதிகாரிகள் வாகன தணிக்கையின் போது, சாலை விதிகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் உத்தரவிட்டுள்ளார். மேலும் போலீசாருக்கு போக்குவரத்தை சீர் செய்யவும், குற்றங்களை கண்டறியவும் உடல் கேமராக்கள் வழங்கப்பட்டுள்ளன. இதனிடையே மேலும் போக்குவரத்து இன்ஸ்பெக்டர்களுக்கு 9, போக்குவரத்து எஸ்ஐ.க்களுக்கு 16, ரோந்து வாகனத்திற்கு 9 என 40 உடல் கேமராக்கள் வழங்கப்பட்டுள்ளன. நிகழ்ச்சியில், போலீஸ் கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் பேசும்போது, ‘மதுரை நகரில் சாலை விதிகளை மீறுபவர்கள் மற்றும் குற்றவாளிகளின் நடமாட்டங்கள், சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்களை கண்டறிய இந்த கேமராக்களை பயன்படுத்தி குற்ற சம்பவங்களை தடுக்க வேண்டும்” என்றார்.

Related Stories: