நாகர்கோவில், நவ.26: ஆரல்வாய்மொழி அருகே மாதவலாயம் பகுதியில் வீட்டில் குடியிருந்து வந்த பெண்ணை அடித்து விரட்டியதற்கு எதிர்ப்பு தெரிவித்து மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் (ரெட் ஸ்டார்) சார்பில், நாகர்கோவிலில் குமரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் மாவட்ட செயலாளர் வக்கீல் பால்ராஜ் தலைமையில் 10க்கும் மேற்பட்டவர்கள் நேற்று காலையில் திடீரென கலெக்டர் அலுவலகத்தில் நுழைந்து உள்ளிருப்பு போராட்டம் நடந்த முயன்றனர்.