×

மதுரைக்கு கூடுதல் பஸ்கள் வேண்டும் ஆர்.எஸ்.மங்கலம் மக்கள் வேண்டுகோள்

ஆர்.எஸ்.மங்கலம், நவ. 22:  ஆர்.எஸ்.மங்கலத்தில் இருந்து மதுரைக்கு கூடுதலாக அரசு பேருந்துகள் இயக்க வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கையை உடனே நிறைவேற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாவட்டத்தில் ஆர்.எஸ்.மங்கலம் முக்கியமான நகரங்களில் ஒன்றாகும். தற்போது தனி தாலுகா தலைமை இடமாக மாறி உள்ளது. இவ்ஊரைச் சுற்றிலும் 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.
தமிழகத்திலேயே அதிகமான மிளகாய் விளையக்கூடிய பகுதி இப்பகுதியில் வாரம் தோறும் சனிக் கிழமையன்று வாரச்சந்தை நடைபெறும். இந்த மிளகாய் சந்தை மிகவும் பிரசித்தி பெற்றது. இதற்கு மதுரை, விருதுநகர், சாத்தூர், சிவகாசி போன்ற பகுதிகளில் இருந்து மிளகாய் வியாபாரிகள் அதிகமானோர் வருகின்றார்கள்.
இங்கு நடைபெறும் சந்தைக்கு பெரும்பாலும் மதுரையில் இருந்துதான் காய்கறி மற்றும் வீட்டுக்கு தேவையான பெரும்பாலான பொருள்கள் வருகின்றது. ஆகையினால் மதுரையில் இருந்து ஆர்.எஸ்.மங்கலத்திற்கு ஒரு சில பஸ்கள் மட்டுமே வருகின்றது. இதனால் குறிப்பிட்ட நேரத்திற்கு பஸ் இருப்பதில்லை. இங்கிருந்து மதுரை செல்ல வேண்டும் என்றால் ஒன்று பரமக்குடி வழியாக செல்ல வேண்டியுள்ளது. அடுத்து திருவாடானை, காளையார்கோவில் சிவகங்கை வழியாக செல்ல வேண்டிய நிலை உள்ளது.
இதனால் பண விரையம் மட்டுமின்றி கல விரையமும் ஏற்படுகின்றது. பொதுமக்களாகிய எங்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் மதுரை-ஆர்.எஸ்.மங்கலம் இடையே கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Mankalam ,Madurai ,
× RELATED மதுரை சித்திரைத் திருவிழா: போலீசாரின்...