விக்கிரவாண்டி, நவ. 22:
மயிலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் மயிலம் காவல் நிலையம் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே வந்த டாரஸ் லாரியை நிறுத்தி சோதனை செய்த போது வானூர் அருகே உள்ள எறையூர் கல்குவாரியில் இருந்து அரசு அனுமதியின்றியும், உரிய ஆவணங்கள் இன்றியும் மகாபலிபுரத்திற்கு சிலைகள் செய்வதற்காக 29 கற்கள் எடுத்துச்செல்வது தெரியவந்தது.