விழுப்புரம், நவ. 22: கர்நாடக அரசு தென்பெண்ணை ஆற்றில் தடுப்பணை கட்டு
வதை தடுக்கத்தவறிய தமிழக அதிமுக அரசை கண்டித்து விழுப்புரத்தில் திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் ஏராளமான நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்டுவதை தடுக்கத்தவறிய தமிழக அதிமுக அரசை கண்டித்து விழுப்புரம், கடலூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி நேற்று காலை அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. விழுப்புரம் மாவட்ட திமுக சார்பில் பழைய பேருந்துநிலையம் முன்பு கொட்டும் மழையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் பொன்முடி எம்எல்ஏ தலைமை தாங்கி கண்டன உரையாற்றினார். எம்எல்ஏக்கள் மஸ்தான், உதயசூரியன், வசந்தம்கார்த்திகேயன், சீத்தாபதிசொக்கலிங்கம், மாசிலாமணி, தெற்கு மாவட்ட செயலாளர் அங்கையற்கண்ணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாவட்ட பொருளாளர் புகழேந்தி வரவேற்றார். தலைமை செயற்குழு உறுப்பினர் ஜனகராஜ், மாவட்ட நிர்வாகிகள் ஜெயச்சந்திரன், மைதிலி, நமச்சிவாயம், மலர்மன்னன், செல்வநாயகம், செஞ்சி சிவா, முன்னாள் எம்எல்ஏ புஷ்பராஜ், பொதுக்குழு உறுப்பினர் பஞ்சநாதன், ஒன்றிய நிர்வாகிகள் தங்கம், சக்கரை, துரை, பிரபாகரன், மும்மூர்த்தி, தெய்வசிகாமணி, வினோத், கபாலி, தொமுச பொதுச்செயலாளர் பிரபாதண்டபாணி, தகவல்தொழில்நுட்ப அணி அன்பரசு, நகர நிர்வாகிகள் புருஷோத்தமன், தாகீர், வழக்கறிஞர் காடுவெட்டி ஏழுமலை, சித்திக்அலி, கவிமோசஸ், அரசு ஒப்பந்ததாரர் மணிகண்டன், ஏழுமலை, சுவைசுரேஷ், செந்தில்குமார் உள்பட ஏராளமான நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.