திருக்கோவிலூர், நவ. 22: திருக்கோவிலூர் அடுத்த வேடாலம் கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம் மகன் ஆனந்தகுமார்(46), இவர் வீரபாண்டியில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் பில் கலெக்டராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி விஜயலட்சுமிக்கும், அப்பகுதியில் மற்றொரு நபருக்கும் இடையே கடந்த 18ம் தேதி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து விஜயலட்சுமி செல்போனில் கணவர் ஆனந்தகுமாரிடம் தெரிவித்துள்ளார்.