நாகை, நவ.20: நாகையில் போலீசாரின் மெத்தன போக்கால் செல்போன் பறிப்பில் ஈடுபடும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.நாகை நகர பகுதியில் முன்பு எல்லாம் நடந்து செல்வோரிடம் செல்போன், பணம் ஆகியவற்றை பறித்து செல்லும் சம்பவங்கள் மிக குறைவாகவே காணப்பட்டது. அதிலும் இரவு நேரங்களில் மட்டுமே இதுபோன்ற சம்பவங்கள் நடந்து வந்தது.ஆனால் இன்று பகல் நேரங்களில் செல்போன் பறிப்பு மற்றும் பணம் பறிப்பு போன்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளது. நாகை புதிய பஸ்ஸ்டாண்டில் இருந்து இறங்கி நடந்து செல்வோர்கள் செல்போனை எடுத்து பேச தொடங்கினால் அல்லது ஏதாவது தகவல் வந்துள்ளதா என்று பார்ப்பதற்காக செல்போனை எடுத்தால் முகமூடி அணிந்து பைக்கில் வரும் 2 மர்ம நபர்கள் மின்னல் வேகத்தில் அந்த செல்போனை பறித்து சென்று விடுகின்றனர். அவர்கள் எங்கிருந்து வருகின்றனர்.