கூடலூரில் டிச.1 முதல் தொடர் உண்ணாவிரதம்
கூடலூர் நவ. 20: கூடலூரில் ஓவேலி மக்கள் கூட்டமைப்பு சார்பில் அனைத்து கட்சி கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு, அமைப்பாளர் முருகையா தலைமை வகித்தார். செயலாளர் சகாதேவன், பொருளாளர் இபினு| உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். சட்டமன்ற உறுப்பினர் திராவிடமணி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். திமுக, காங்கிரஸ், சிபிஎம், சிபிஐ, முஸ்லீம் லீக், விசிக , மதிமுக, தேமுதிக, அமமுக, மநேமக, விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இதில், ஓவேலிமக்களின் வாழ்வாதார பிரச்னைகளான, பிரிவு 17 மற்றும் பிரிவு 53 நிலங்களில் காலம்காலமாக வசிக்கும் மக்களின் விவசாய நிலங்கள் மற்றும் வீட்டு மனைகளுக்கு பட்டா வழங்க வேண்டும். மின் இணைப்பு கிடைக்காத அனைத்து வீடுகளுக்கும் மின் இணைப்பு வழங்க வேண்டும்.