ஜெயங்கொண்டம், நவ.19: பத்தாம் வகுப்பு படித்த சமையலர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என சத்துணவு பணியாளர் சங்க கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகில் உள்ள ஆண்டி மடத்தில் தமிழ்நாடு அரசு சத்துணவு பணியாளர் சங்க அமைப்பு கூட்டம் நடைபெற்றது . மாநில தலைவர் லூயிஸ் பிரான்சிஸ் தலைமை வகித்தார். இந்திராகாந்தி முன்னிலை வகித்தார் மாநில அமைப்பு செயலாளர் சீனிவாசன் மாவட்ட செயலாளர் பன்னீர்செல்வம் அரசு பணியாளர் சங்க மாவட்ட பொருளாளர் விஜயகுமார் ஆகியோர் பேசினர். கூட்டத்தில் மாவட்ட தலைவராக இந்திராகாந்தி செயலாளராக எழிலரசி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர் கூட்டத்தில் ஒன்றிய செயலாளர் விமலா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்கூட்டத்தில் பத்தாம் வகுப்பு படித்த சமையலர்களுக்கு அமைப்பாளர்களாக பதவி உயர்வு வழங்க வேண்டும்.