விழுப்புரம், நவ. 12: விழுப்புரம் அருகே குடும்பம் நடத்த வராத மனைவியை சரமாரியாக தாக்கிய கணவரை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் அருகே காணை தேர்முட்டித்தெருவைச் சேர்ந்தவர் சிவா(28). கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கும் முனிஸ்வரன்கோயில் தெருவைச் சேர்ந்த தெய்வானை(25). ஆகியோருக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஒரு ஆண், ஒரு பெண் குழந்ைத உள்ளது. இதனிடையே சிவா தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வருவாராம். போதையில் மனைவியிடம் பிரச்னை செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.