நாகை, நவ.7: தினகரன் செய்தி எதிரொலியால் நாகை அருகே கொள்ளிடம் கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு சீர் செய்யப்பட்டது. நாகையில் இருந்து வேளாங்கண்ணிக்கு குடிநீர் ராட்சத குழாய் மூலம் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பயன் அடைந்து வருகின்றனர். இந்நிலையில் வேளாங்கண்ணி அடுத்த ரெட்டாலடி பாலம் அருகே அமைக்கப்பட்டு இருந்த ராட்சத குழாயில் உடைப்பு ஏற்பட்டு தினந்தோறும் 20 அடி தூரத்திற்கு மேல் தண்ணீர் பீய்ச்சி அடித்து வீணானது. குடிநீர் தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான லிட்டர் சாலையில் சென்றது. குடிநீர் வீணாக ஓடியதுடன் சாலையும் சேதம் ஏற்படும் நிலை ஏற்பட்டது.