மயிலாடுதுறை, நவ. 7: மயிலாடுதுறை அருகே அரசு பஸ் டிரைவரை தாக்கியவரை போலீசார் கைது செய்தனர். நாகை மாவட்டம் மயிலாடுதுறை அரசு போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுனராக பணியாற்றி வருபவர் குமரேசன். இவர் கடந்த 6ம் தேதி மயிலாடுதுறையிலிருந்து சித்தமல்லி அரசு நகரபேருந்தினை ஓட்டிச் சென்றார். அப்போது கொண்டல் சாலையில் பைக் ஒன்றை முந்திசென்றதால் பைக்கில் சென்ற 3 பேர் பேருந்தை வழிமறித்து ஓட்டுனர் குமரேசனையும், நடத்துனர் பூவராகவனையும் தாக்கியுள்ளனர்.