கெங்கவல்லி, நவ.6: கெங்கவல்லி தாலுகா வீரகனூரை சுற்றியுள்ள கிராமங்களில் சாராயம் விற்பனை செய்வதாக எஸ்பி தீபா கணிக்கருக்கு புகார் வந்தது. அவரது உத்தரவின் பேரில் வீரகனூர் இன்ஸ்பெக்டர் ராம் ஆண்டவர் தலைமையில் எஸ்ஐ தினேஷ்குமார் மற்றும் போலீசார் வீரகனூர் சுற்றியுள்ள கிராமங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, தீரவீரகனூர் அருகே கவர்பனை ஊராட்சியில் சாராய விற்பனையில் ஈடுபட்ட ரமேஷ்(56), சௌந்தர்(58) ஆகிய இருவரிடமிருந்து 8 லிட்டர் சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து ஆத்தூர் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி ஆத்தூர் கிளை சிறையில் அடைத்தனர்.