பரமத்திவேலூர், நவ.6: பரமத்திவேலூர் அடுத்த பொத்தனூர் பேரூராட்சியில் டெங்கு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பேரூராட்சி செயல் அலுவலர் பாலசுப்ரமணியன் தலைமையில் துப்புரவு பணியாளர் குணசேகரன், மற்றும் அலுவலகப் பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள் கலந்துகொண்டு, குழுக்களாக பிரிந்து பேரூராட்சியில் வார்டு வார்டாக சென்று டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். வீடுகளில் உள்ள தரை மட்ட தொட்டிகள், மேல்நிலை தொட்டிகளில் கொசுப்புழுக்களை அழிக்கு அபேட் மருந்து ஊற்றினர். குளோரின் மருந்து பொடிகளை போட்டினர்.