பணகுடி, நவ.6: நெல்லை - கன்னியாகுமரி நான்குவழிச்சாலை ஓரங்களில் மழையால் ஏற்பட்டுள்ள பள்ளங்கள் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
நெல்லை - கன்னியாகுமரி நான்குவழிச்சாலை பகுதியில் அமைந்துள்ள பணகுடி பாம்பன்குளம் பஸ் நிறுத்தம் அருகில் சாலையை யொட்டி மழை காரணமாக பள்ளம் ஏற்பட்டுள்ளது.தற்போது தெற்கு வள்ளியூர் பகுதியில் இருந்து கள்ளிகுளம் செல்லும் பாதை அடைக்கப்பட்டதாலும் திருச்செந்துர் மற்றும் நெல்லைக்கு சாத்தான்குளம், ராதாபுரம் உள்ளிட்ட கிழக்கு பகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள், பேருந்துகள் பாம்பன்குளம் வழியாகதான் திரும்பி செல்கிறது. தொடர்ந்து வாகன போக்குவரத்து காரணமாக நான்குவழிச்சாலையை ஒட்டிய பகுதிகளில் பல இடங்களில் பள்ளம் ஏற்பட்டுள்ளது.