விழுப்புரம், நவ. 5: ஆவின் பாலகம் அமைக்க அனுமதிக்க கோரி ஆட்சியர் அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளி தம்பதியினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று வாராந்திர பொதுமக்கள் குறைகேட்புக்கூட்டம் நடந்தது. ஆட்சியர் சுப்ரமணியன் மற்றும் அதிகாரிகள் பொதுமக்களிடமிருந்து மனுக்களை வாங்கினார்கள். ஒருமாத கால இடைவெளிக்கு பிறகு குறைகேட்புக்கூட்டம் நடந்ததால் நேற்று ஏராளமான பொதுமக்கள் மனு கொடுக்க வந்திருந்தனர். இந்நிலையில் மாற்றுத்திறனாளி தம்பி, தங்களது பெண் குழந்தையுடன் ஆட்சியர் அலுவலகத்தில் அவரது கார் முன்பு அமர்ந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டார். பாதுகாப்பு பணியிலிருந்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தியபோது, விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே சக்கராபுரம் மண்டப தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி உமாமகேஸ்வரி. இருவரும் மாற்றுத்திறனாளி என்பது தெரியவந்தது.