ரிஷிவந்தியம், நவ. 5: ரிஷிவந்தியம் அருகே மரூர் கிராமத்தை சேர்ந்தவர் தாமோதிரன் மனைவி ராதா (55). கணவன், மனைவி இருவரும் கூலி வேலை செய்து வருகின்றனர். கூரை வீட்டில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று மதியம் இவர்கள் வேலைக்கு சென்றிருந்தனர். அப்போது, தாமோதிரன் வீடு திடீரென தீப்பிடித்து எரிந்தது. அக்கம் பக்கத்தினர் சங்கராபுரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். இருந்தபோதும், தீ விபத்தில் கூரை வீட்டில் இருந்த கட்டில், பீரோ உள்ளிட்ட ரூ. 50 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது. இரண்டு குடிசைகள் எரிந்து நாசம்: தியாகதுருகம் அருகே சின்னமாம்பட்டு கிராமத்தில் அய்யாசாமி என்பவரின் குடிசை வீடு திடீரென நேற்று முன்தினம் இரவு தீப்பற்றி எரிந்தது. சம்பவத்தன்று அய்யாசாமி மற்றும் அவரது மனைவி அலமேலு இருவரும் உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளனர். அப்போது அவர்களது கூரை வீடு தீப்பற்றி எரிந்தது. தீயை அக்கம் பக்கத்தில் இருந்தவர்களும், கிராம மக்களும் தண்ணீர் ஊற்றி அணைக்க முயன்றனர். ஆனால் தீ முழுவதும் பரவ தொடங்கியது .