தீ விபத்தில் 3 குடிசை எரிந்து நாசம்

ரிஷிவந்தியம், நவ. 5:     ரிஷிவந்தியம் அருகே மரூர் கிராமத்தை சேர்ந்தவர் தாமோதிரன் மனைவி ராதா (55). கணவன், மனைவி இருவரும் கூலி வேலை செய்து வருகின்றனர். கூரை வீட்டில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று மதியம் இவர்கள் வேலைக்கு சென்றிருந்தனர். அப்போது, தாமோதிரன் வீடு திடீரென தீப்பிடித்து எரிந்தது. அக்கம் பக்கத்தினர் சங்கராபுரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். இருந்தபோதும், தீ விபத்தில் கூரை வீட்டில் இருந்த கட்டில், பீரோ உள்ளிட்ட ரூ. 50 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.  இரண்டு குடிசைகள் எரிந்து நாசம்: தியாகதுருகம் அருகே சின்னமாம்பட்டு கிராமத்தில் அய்யாசாமி என்பவரின்   குடிசை வீடு திடீரென நேற்று முன்தினம் இரவு தீப்பற்றி எரிந்தது. சம்பவத்தன்று அய்யாசாமி மற்றும் அவரது மனைவி அலமேலு இருவரும் உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளனர். அப்போது அவர்களது கூரை வீடு தீப்பற்றி எரிந்தது. தீயை அக்கம் பக்கத்தில் இருந்தவர்களும், கிராம மக்களும் தண்ணீர் ஊற்றி அணைக்க முயன்றனர். ஆனால் தீ முழுவதும் பரவ தொடங்கியது .

பின்னர் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதன் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் பரந்தாமன் குழு தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் அருணாச்சலம், பிரவீன், சுடர் தயாளன் ஆகியோர் தீயை அணைத்தனர். அதற்குள் வீட்டில் இருந்த கட்டில், பீரோ உள்ளிட்ட ரூ. 60 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள்  எரிந்து நாசமானது.  மேலும், தியாகதுருகம் அருகே மடம் கிராமத்தை சேர்ந்த சுவந்திரம். இவரது மனைவி லட்சுமி. லட்சுமி தனது ஆடுகளை மேய்ச்சலுக்காக வயலுக்கு ஓட்டி சென்றுள்ளார். அப்போது அவருக்கு சொந்தமான குடிசை வீடு திடீரென தீப்பிடித்து எரிந்தது. உடனே அருகில் உள்ளவர்கள் தீயை அணைத்தனர். மேலும், தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய அலுவலர் கண்ணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதில் 70 ஆயிரம் ரூபாய்  மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.

Related Stories: